Saturday, July 11, 2009

சிம்பு ,த்ரிஷா காதல்




தலைப்பை படித்துவிட்டு விவகாரமாக யோசிக்கவேண்டாம். சிம்புவும் -த்ரிஷாவும் ஜோடி சேரும் இரண்டாவது படம்தான் ‘விண்ணைத் தாண்டி வருவாயா'.முதலில் டூயட் ஆடிய படம் ‘அலை'.
ரெண்டு படத்துல ஜோடி சேர்ந்துட்டா காதல் என்று கிளம்பும் புரளி தமிழ்சினிமாவுக்கு புதிதா என்ன? சிம்புவும்-த்ரிஷாவும் காதலிக்கிறாங்கப்பான்னு எந்த புண்ணியவானோ கிளப்பிவிட்ட புரளி, ஜோராக பரவி சிம்பு காதுவரை ரீச்சாகி 'ரீங்காரமிடுகிறது'. 'விண்ணைத்தாண்டி வருவாயா' படப்பிடிப்புக்காக மால்டா தீவுக்கு சென்றபோதுகூட இருவரும் நெருக்கமாக இருந்ததாகவும் ஒரு தகவல். என்ன சிம்பு இதெல்லாம்? என்றால் தலையிலடித்துக்கொண்டு மறுக்கிறார். ”உண்மைய சொல்லப்போனா பாடல் காட்சிக்காக மால்டா தீவுக்கு போனபோது த்ரிஷாவிடம் நான் பேசக்கூட நேரமில்ல. அந்த அளவுக்கு நான் எனது பர்சனல் வேலையில் பிஸியா இருந்தேன். எனது அடுத்த படங்களான ‘மன்மதன் -2','வாலிபன்' ஆகிய படங்களுக்கான ஸ்கிரிப்ட்டை எழுதி முடித்துவிட்டேன். இவைகளில் எதை முதலில் ஆரம்பிக்கப்போகிறேன் என்பதை விரைவில் அறிவிப்பேன்” என்றார் புதிய பொறுமையுடன்.
இன்னொரு செய்தி. 'வாலிபன்' படத்தில் சிம்புவின் கேரக்டர் பெயர் சார்லஸ் ஆண்டனி. அதாவது பிரபாகரனின் மகன் பெயர் என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.

No comments:

Post a Comment