Friday, July 17, 2009

Vtv Shooting in Chennai.


Vinnai Thaandi Varuvaaya is getting completed in a very hushy manner. The Team is currently shooting in chennai and will continue here till 27th july. Later the Team is moving to Newyork. Its known well that Gowtham Menon Sir likes to Shoot at American Land.The team denies rumours floating across saying that the Oscar Awardee Legend A.R.Rahman is not composing the music and the back ground score. They say that Just yesterday A.R.R Sir gave us a wonderful melody that will make a love hater to start loving a person.PS : This weekend there will be a interview of Thalaivan Lss Silambarasan in The Tamil Magazine Vikatan. Simbucentral will give u the first copy of that to you.Its always adivised to see here as well as to buy the official copy in stores.

Simbu and Trisha share a huge Chemistry







Monday, July 13, 2009

ஷாம்லிக்கு அழைப்பு விடும் சிம்பு





போனால் போகட்டும் போடிங்கிற முடிவுக்கு வந்திருக்கிறார் சிம்பு.
இது போடா போடி பற்றிய முடிவுதான். இதில் முதலில் நடிக்க ஒப்புக் கொண்ட வரலட்சுமி, இப்போது வராத லட்சுமியாகி விட்டார். ஆமாம், இந்த படத்திலிருந்து அவர் விலகிக் கொண்டாராம். மம்மா மியா ஷோவுக்கு கிடைத்த வரவேற்பு, அவரை முற்றிலும் அந்த திசைக்கு திருப்பிவிட்டது. அதுமட்டுமல்ல, போடா போடி பற்றிய ஒரு தெளிவான முடிவு சிம்புவுக்கே இல்லாதபோது எதை நம்பி, எப்போது கால்ஷீட் கொடுப்பது என்ற குழப்பமும்தான் வரலட்சுமியின் இந்த அதிரடிக்கு காரணம். இதற்கிடையில் அப்பா சரத்குமாரும், வரலட்சுமியின் சுதந்திரத்தில் குறுக்கே நிற்க விரும்பாததால், தைரியமாகவும், வெளிப்படையாகவும் சிம்புவிடம் சொல்லிவிட்டாராம் வரலட்சுமி. இதற்கிடையில், சிம்புவின் பார்வை ஷாம்லி மீது விழுந்திருக்கிறது. போடா போடியில் வரலட்சுமிக்கு பதிலாக ஷாம்லியை நடிக்க வைக்கலாமே என்று நினைக்கிறாராம்.
ஆனால் எதிர்முனையில் ஒரு ஆர்வமும் இல்லை என்கிறார்கள். சிம்பு படத்தை பற்றி மட்டுமல்ல, எந்த படத்தை பற்றியுமே. தெலுங்கில் இவர் நடித்த ஓய் ரிலீஸ் ஆகிவிட்டது. அங்கிருந்தே ஏராளமான அழைப்புகள் வருகிறதாம் ஷாம்லிக்கு. ஆனால், தெலுங்கு பட இயக்குனர்களுக்கும் உடனே ஓ.கே சொல்லாமல், தமிழ் பட இயக்குனர்களுக்கும் ஒரு முடிவை சொல்லாமல் காலம் கடத்துகிறார் ஷாம்லி. அவருக்கு நடிப்பின் மீதே ஆசை இல்லை என்றும் சொல்கிறார்கள்.
விரும்பி கேட்பவர்களுக்கு ஷாம்லி தரப்போவது வரமா? துறவரமா?

Saturday, July 11, 2009

சிம்பு ,த்ரிஷா காதல்




தலைப்பை படித்துவிட்டு விவகாரமாக யோசிக்கவேண்டாம். சிம்புவும் -த்ரிஷாவும் ஜோடி சேரும் இரண்டாவது படம்தான் ‘விண்ணைத் தாண்டி வருவாயா'.முதலில் டூயட் ஆடிய படம் ‘அலை'.
ரெண்டு படத்துல ஜோடி சேர்ந்துட்டா காதல் என்று கிளம்பும் புரளி தமிழ்சினிமாவுக்கு புதிதா என்ன? சிம்புவும்-த்ரிஷாவும் காதலிக்கிறாங்கப்பான்னு எந்த புண்ணியவானோ கிளப்பிவிட்ட புரளி, ஜோராக பரவி சிம்பு காதுவரை ரீச்சாகி 'ரீங்காரமிடுகிறது'. 'விண்ணைத்தாண்டி வருவாயா' படப்பிடிப்புக்காக மால்டா தீவுக்கு சென்றபோதுகூட இருவரும் நெருக்கமாக இருந்ததாகவும் ஒரு தகவல். என்ன சிம்பு இதெல்லாம்? என்றால் தலையிலடித்துக்கொண்டு மறுக்கிறார். ”உண்மைய சொல்லப்போனா பாடல் காட்சிக்காக மால்டா தீவுக்கு போனபோது த்ரிஷாவிடம் நான் பேசக்கூட நேரமில்ல. அந்த அளவுக்கு நான் எனது பர்சனல் வேலையில் பிஸியா இருந்தேன். எனது அடுத்த படங்களான ‘மன்மதன் -2','வாலிபன்' ஆகிய படங்களுக்கான ஸ்கிரிப்ட்டை எழுதி முடித்துவிட்டேன். இவைகளில் எதை முதலில் ஆரம்பிக்கப்போகிறேன் என்பதை விரைவில் அறிவிப்பேன்” என்றார் புதிய பொறுமையுடன்.
இன்னொரு செய்தி. 'வாலிபன்' படத்தில் சிம்புவின் கேரக்டர் பெயர் சார்லஸ் ஆண்டனி. அதாவது பிரபாகரனின் மகன் பெயர் என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.

Friday, July 3, 2009

விண்ணை தாண்டி வருவாயா? திடீர் சுணக்கத்தில் சிம்பு



வேக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த விண்ணை தாண்டி வருவாயா படத்தில் திடீர் சுணக்கம்.
கோயமுத்தூர் எக்ஸ்பிரஸ்சை கோயம்பேட்டுக்கு திருப்பிவிட்ட மாதிரி ஒரே அல்லோகலம் என்கிறார்கள். என்னவாம்? தெலுங்கில் மகேஷ்பாபுவிடம் கால்ஷீட் வாங்கியிருக்கிறார் கவுதம் மேனன். ஆனால் உடனே அல்ல. ஓரிரு மாதங்கள் கழித்துதான் இவரது படத்தில் நடிக்க வருவாராம் பாபுகாரு. விண்ணை தாண்டி வருவாயா கதையைதான் அவரிடமும் சொல்லியிருக்கிறார் கவுதம். தான் நினைத்தமாதிரி தெலுங்கு படம் நகர ஆரம்பித்தால் தமிழ், தெலுங்கு ரிலீசை ஒரே நேரத்தில் வைத்துக் கொள்ளலாம் என்பது கவுதமின் கணக்கு. ரஹ்மானின் தமிழ் ட்யூனையே தெலுங்குக்கும் பயன்படுத்திக் கொண்டால், ஆடியோ மார்கெட்டிலும் ஒரு அட்டகாச வசூலை பார்க்கலாமே? இப்படி அவர் போட்ட கணக்கில்தான் இந்த சுணக்கம். ஒருவேளை தமிழ் படத்தை முதலில் கொண்டு வந்து அது வேறு மாதிரியான ரிசல்ட்டை கொடுத்தால், மொத்த கதையையும் மாற்ற சொல்வார் மகேஷ்பாபு என்ற அச்சமும் இந்த ஒரே நேர ரிலீஸ் ஐடியாவுக்கு காரணமாம். இதற்கெல்லாம் சம்மதிக்க முடியாத சிக்கலில் இருக்கிறார் வி.தா.வ நாயகன் சிம்பு. இரு கெட்டப்புகளில் நடித்திருக்கும் இவர் ஒரு கெட்டப்பில் தாடி வைத்திருக்கிறாராம்! இதற்காக நீட்டலும் மழித்தலும் வேண்டா என்று ஒதுங்கியே இருக்கும் சிம்புவுக்கு தாடியை எடுப்பதா? அல்லது காத்திருப்பதா என்ற சிக்கலும் வந்திருக்கிறது. எது எப்படியோ? போடா போடி வேலையை துவங்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் இப்போது.

போடா போடி கு பிறகு தான் சிம்பு இன் வாலிபன் ஆரம்பம்


With so many rumours flying around about whether the Simbu-Varalaxmi Sarathkumar-starrer Podi Podi has been shelved, Simbu himself finally announced that it has NOT been struck off his projects list. The movie has been put on the back burner for a while, though, as Simbu is focussed on completing Vinnathaandi Varuvaayaa with Gautham and then Valiban; only then will he move on to Poda Podi.
When asked if Varalaxmi is peeved at her very first project facing such a delay, Simbu said that understandably the debutante must be upset about this, but also understands that the movie WILL happen soon and meanwhile, she could also consider other scripts.